சனி, 13 ஆகஸ்ட், 2016

தேசியக் கல்விக் கொள்கை - உண்மையும் பொய்களும்

வழக்கம்போல தேசிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டம் பற்றிய பொய்களை நமது அறிவுஜீவிகள் அடித்துவிட ஆரம்பித்து விட்டனர். அவர்களின் வழக்கமான ஜல்லிகளும், உண்மைகளும் என்ன என்று பார்ப்போம்.


இந்தக் கல்விக் கொள்கையை எதோ சில தனிநபர்கள் வடிவமைத்து உள்ளனர். கல்வியாளர்களிடமோ, பொதுமக்களிடமோ கருத்துக் கேட்கவில்லை என்று கூறுகின்றனர்.

உண்மை என்னவென்றால் தொடக்கக்கல்வி, மேல்நிலை மற்றும் உயர்நிலைக்கு கல்வி, தொழில்சார் கல்வி, பள்ளிகளின் தேர்வு முறை, ஆசிரியர்கள் பணிக்கான படிப்பு மற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறை, பெண்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மை மக்களின் கல்வியறிவை மேம்படுத்துதல், கணிணிகளின் பயன்பாட்டின்மூலம் கல்வி கற்றுத்தரும் முறையை முன்னெடுத்தல், கல்வி கற்ப்பிக்கும் முறையில் புதிய நவீன முயற்சிகள், கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் வழிமுறைகள், தாய்மொழி வழியாக கல்வி புகட்டுவதில் இன்று உள்ள சவால்களும் அதனை வெற்றிகாணும் வழிமுறைகளும், உடல்பயிற்சி, வாழ்க்கையை எதிர்கொள்ளும் முறை, கலைக்கல்வி,  நன்னெறிகளை பற்றிய அறிவைப் புகட்டும் வழிமுறைகள், மாணவர்கள் ஆரோக்கியம் என்ற தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

இதற்கான கலந்தாய்வுகள் கிராமப் பஞ்சாயத்தில் தொடங்கி, கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் பின்னர் மாநில அளவிலும் நடத்தப்பட்டன. இவற்றில் கிடைத்த ஆலோசனைகள் தொகுக்கப்பட்டு தேசியஅளவில் ஆறு மண்டலங்களில் விவாதிக்கப்பட்டன.

பலநேரங்களில் அன்றய மனிதவளத் துறை அமைச்சர் திருமதி ஸ்ம்ரிதி இரானி அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாகக் கலந்து கொண்டார்.


இந்தக் கூட்டங்கள் பற்றிய சில செய்தித் தொகுப்புகள் 









இதுபோலவே அரசு இனி கல்வியில் எந்த முதலீடும் செய்யப்போவது இல்லை. ஐந்தாம் வகுப்பிலேயே மாணவர்கள் வடிகட்டப்பட்டு தொழில்கல்விக்கு அனுப்பிடப்பட்டுவிடுவார். மத்திய அரசு சமிஸ்கிரத மொழியைத் திணிக்கப் போகிறது, பள்ளிகள் அருகே உள்ள மடங்களோடு இணைக்கப்பட்டு விடும் என்று ஏதேதோ வதந்திகளை பொய்களை பரப்பிக்கொண்டு இருக்கின்றனர்.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு என்ன சொல்கிறது என்பதை பாப்போம்.