ஞாயிறு, 20 நவம்பர், 2016

‘புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2016’ - ஒரு பார்வை

நாடு அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்திலேயே சுதந்திர இந்தியாவின் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்ற விவாதங்கள் பெருமளவில் நடந்து வந்திருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வெவ்வேறு காலகட்டத்தின் சவால்களை எதிர்கொள்ளும் அளவிற்குக் கல்வித் திட்டம் பற்றிய கொள்கை முடிவுகள் நிபுணர் குழுக்களால் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் வரையறை செய்யப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றத்தால் இன்றையக் கல்விமுறையை மாற்றி அமைக்கவேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில் கம்யூனிசக் கோட்பாடு பயனற்றதாகிப் பின்தங்கிப் போயுள்ளது. புதிய சிந்தனைப் போக்குகளாலும் அறிவியல் வளர்ச்சியாலும் பல புதிய தொழிலதிபர்கள் உருவாகிவந்துள்ளனர். தாராள மயமாக்கம், தனியார் மயமாக்கம், உலக மயமாக்கம் என்பவை இன்றையக் காலகட்டத்தில் மறுக்கமுடியாத தேவையாக மாறி இருக்கிறது. 

நிரந்தர வேலைவாய்ப்பு என்பது மறைந்துபோய்க்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இன்று நாம் பார்க்கும் பல வேலைகள் இன்னும் பத்தாண்டுக் காலத்தில் இல்லாமலே போய்விடலாம். எப்படி சுருக்கெழுத்தும் தட்டச்சும் இன்று பயனற்றுப் போய்விட்டனவோ அதுபோல. பல தரப்பட்ட வேலைகள் கணினி மூலமாகவும் தானியங்கி இயந்திரங்கள் மூலமாகவும் செயல்படப் போகின்றன. இன்றைய நமது கல்விமுறை, தனது காலில் தானே நிற்கும் திறன்வாய்ந்த மக்களை உருவாக்குவதாகவே இருக்கவேண்டும்.

இந்திய நாட்டின் மக்கள்தொகையில் இரண்டில் ஒரு பங்கு, 25 வயதிற்கும் குறைவான இளைஞர்களே. இந்த மனிதவளத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினால்தான் அனைவருக்கான வளர்ச்சி என்பது சாத்தியமாகும். இல்லையென்றால் இந்த மனிதவளமே நாட்டிற்குப் பெரும் சவாலாக மாறிவிடும். இந்தப் பின்னணியில்தான் நாம் இந்தப் புதிய கல்விக்கொள்கை வரையறையைப் பரிசீலிக்க வேண்டி உள்ளது.

மாறிவரும் உலகில் நமது கல்வித் திட்டம் மட்டும் மாறாமல் இருக்கமுடியாது. நம்முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள நமது கல்வித் திட்டத்தில் என்னவிதமான மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்று விவாதிக்க மத்திய மனித வளத் துறை ‘தேசியக் கல்விக் கொள்கை - 2016’ என்ற அறிக்கையை மக்கள்முன் விவாதத்திற்கு வைத்துள்ளது. 240 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை ஒன்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் அத்தியாயம் இந்தியாவில் கல்வியைப் பற்றிய வரலாற்றுச் சித்திரத்தையும் இன்றைய நிலையையும் காட்டுகிறது. இரண்டாவது அத்தியாயம் இந்த அறிக்கைக்கான அணுகுமுறையையும் செயல்முறைகளையும் விவரிக்கிறது. மூன்றாவது அத்தியாயம் புதிய கல்விக் கொள்கையின் நோக்கத்தையும், அடுத்த இரண்டு பிரிவுகள் புதிய கல்விக் கொள்கையின் தேவையையும் கல்வி ஆளுகையையும் பற்றி விவாதிக்கின்றன. ஆறாவது அத்தியாயம் பள்ளிக் கல்வி பற்றியும் ஏழாவது அத்தியாயம் உயர் கல்வி பற்றியும் எட்டாவது பிரிவு தேசிய அளவிலான கல்வி நிலையங்களைப் பற்றியும் பேசுகின்றன. கடைசி அத்தியாயம் எல்லாத் தலைப்புகளிலும் அளிக்கப்பட்ட பரிந்துரைகளைப் பட்டியல் இட்டுத் தருகிறது.

எதிர்க்கட்சிகள் இந்த அறிக்கைமீது குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமாவை, இந்த வரைவறிக்கையை தயாரிக்கும்போது கல்வித்துறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை என்பதும், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுசெய்து இருக்கிறது என்பதும்.

இந்த அறிக்கை எப்படித் தயாரிக்கப்பட்டது என்று விளக்கப்பட்டிருக்கும் பகுதியில் இதற்கான தெளிவான பதில் இருக்கிறது. இதற்கு முந்தையக் கல்விக் கொள்கைகளை வரையறை செய்த முறைக்கும் இந்தக் கல்விக் கொள்கையை வகுத்த முறைக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. முந்தையக் கொள்கைகள் துறை சார்ந்த நிபுணர்களால் விவாதிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டன. அதாவது மேலிருந்து கீழாக அது பயணித்தது. ஆனால் இந்தக் கொள்கையோ கீழிருந்து மேலாகப் பல்வேறு நிலைகளில் தொகுக்கப்பட்டு வரையறை செய்யப்பட்டு உள்ளது. கிராம நிலைகளில் விவாதிக்கப்பட்டு, அவை அடுத்த நிலைகளில் தொகுக்கப்பட்டு, மாவட்ட அளவிலான விவாதங்கள், பின்னர் மாநில அளவிலான விவாதங்கள் / பரிந்துரைகள் என்று தொகுக்கப்பட்டு உள்ளது. இரண்டரை லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் விவாதிக்கப்பட்டுப் பின்னர் ஆறாயிரம் கோட்டங்களில்

வடிகட்டப்பட்டு, அறுநூற்று எழுபதுக்கும் மேலான மாவட்டங்களில் விவாதிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட மாநில அளவிலான கூட்டங்களில் தரப்பட்ட ஆலோசனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதுபோக மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் பல்வேறு பொதுமக்களும் கல்வி பற்றிய தங்கள் கருத்துக்களை அளித்துள்ளனர். இவற்றைத் தொகுத்து ஐவர் அடங்கிய குழு தனது பரிந்துரையை அரசுக்கு வழங்கி இருக்கிறது.

இந்த அறிக்கையின் மிக முக்கியமான கருத்துகளை இவற்றைச் சொல்லலாம்:

1. நாட்டின் மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product) 6% நிதி கல்விக்காக ஒதுக்கப்படவேண்டும். இன்றைய நிலையில் 3.5% நிதிதான் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. அதாவது இதுவரை அளிக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் இன்னும் ஒரு பங்கு கூடுதல் நிதி வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக்கான நிதி என்பது இந்த 6%இல் சேராது என்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு தனியாக இருக்கவேண்டும் என்றும் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

2. இன்று இருப்பது போல பட்டப்படிப்பு முடித்த பின்னர் ஆசிரியர் கல்வி என்றில்லாமல், பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு நான்காண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்றும் அந்த மாணவர்களுக்கே ஆசிரியர் பணி அளிக்கப்படவேண்டும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

இதன்படி, எப்படி மருத்துவம் / பொறியியல் / சட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆயத்தமாகிறார்களோ அதுபோலவே ஆசிரியர் பணிக்கும் முன்கூட்டியே மாணவர்கள் முடிவு செய்து சேர்வதால், உண்மையாகவே ஆசிரியர் பணியில் அக்கறையும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் உருவாகி வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கிராமப் பகுதிகளிலும், மலைவாழ்ப் பகுதிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க ஆலோசனை கூறப்பட்டு உள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள பெண்களுக்கு அரசின் செலவில் தகுந்த கல்வி அளித்து அவர்களையே அங்கே உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தொலைதூரத்தில் உள்ள மாணவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இனி எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சில முக்கியமான குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்:

சம்ஸ்கிருதம் புகுத்தப்படுகிறதா?

உண்மையைச் சொன்னால் ஜெர்மன், பிரெஞ்சு, அரபி முதலான பல மொழிகளைப் படிக்கும் வாய்ப்பைப் பள்ளிக்கூடங்கள் உருவாக்கவேண்டும் என்றுதான் இந்த வரையறை கூறுகிறது.

ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியிலோ அல்லது மாநிலத்தின் மொழியிலோதான் கல்வி இருக்கவேண்டும் என்றும், தொடக்கக் கல்வியில் இரண்டாவது மொழியையும் மேல்நிலை அளவில் மூன்றாவது மொழியையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யலாமா வேண்டாமா என்பதையும், அறிமுகம் செய்வதாக இருந்தால் அவை எந்த மொழிகளாக இருக்கவேண்டும் என்ற முடிவையும் மாநில அரசாங்கங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம் என்றுதான் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதைவிட முக்கியமான அறிவுரை, மலைவாழ்ப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் பேசும் மொழியில் பாடங்கள் நடத்தப்படவேண்டும் என்பதும், அதற்கான பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதும்தான். ஆக சம்ஸ்கிருதம் புகுத்தப்படுகிறது என்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. மொழிக் கொள்கையை என்பது மாநில அரசுதான் முடிவு செய்யும்.

யோகா திணிக்கப்படுகிறதா?

பாரதம் இந்த உலகுக்கு வழங்கிய கொடை யோகா. அதனால்தான் இன்று ஐக்கிய நாட்டுச் சபையே உலக யோகாசன தினத்தை உலகம் எல்லாம் கொண்டாட வகை செய்துள்ளது. இன்றைய மாணவர்களுக்கு உடல்பயிற்சி என்பது இல்லாமலே ஆகிவிட்டது. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றுதான் கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. பல பள்ளிகளில் முறையான விளையாட்டு மைதானங்கள் இருப்பதில்லை. பல நகரங்களில் பள்ளிகள் விரும்பினாலும் இடப் பற்றாக்குறையால் மைதானங்களை உருவாக்க முடிவதில்லை. இந்த நிலையில் மாணவர்களின் உடலை உறுதி செய்ய யோகா உதவும் என்றுதான் வரையறையில் கூறப்பட்டுள்ளது. யோகாவை எதிர்க்கும் கட்சிகளின் தலைவர்களே யோகாசனப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

சிறுபான்மையினரின் சிறப்புரிமை மறுக்கப்படுகிறதா?

முதலில் சிறப்புரிமை என்பது என்ன? அரசின் எந்தச் சட்டதிட்டங்களும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது என்பதா? அப்படி என்றால் அது என்ன நியாயம்? கல்விக்கான உரிமைச் சட்டம் (Right to Education Act) எல்லாக் கல்வி நிறுவனங்களும் தங்களின் மொத்த மாணவர் சேர்க்கையில் 25% இடங்களைப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்தச் சட்டம் சிறுபான்மைக் கல்வி நிலையங்களில் பின்பற்றப்படத் தேவையில்லை என்றிருக்கிறது. இந்தக் கல்விக் கொள்கை, சிறுபான்மைக் கல்வி நிலையங்களும் தங்கள் மாணவர் சேர்க்கையில் 25% இடங்களைத் தேவைப்படும் வசதி குறைந்த மாணவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று கூறுகிறது. இது, சமூகநீதியை முன்னெடுக்கும் கட்சிகளை ஏன் வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்பது புரியாத புதிர்.

எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்பது ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே என்பதால் கல்வி மறுக்கப்படுகிறதா?

நல்லெண்ணத்தின் மீதேறி நரகத்திற்கும் போகலாம் என்று ஒரு பழமொழி உண்டு. எட்டாம் வகுப்பு வரை எல்லா மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்யவேண்டும், தேர்வு முறையில் அவர்கள் யாரையும் தோல்வி அடையச் செய்யக்கூடாது என்று, நடைமுறையில் இருக்கும் கல்வி உரிமைச் சட்டம் வரையறை செய்துள்ளது. இதன்மூலம் குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு வரை குழந்தைகள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் எடுத்த ஒரு ஆய்வின்படி ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 40% மாணவர்கள் இரண்டாம் வகுப்பில் கற்கவேண்டிய கல்வியைக்கூடக் கற்றிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நீண்ட விவாதத்தை நடத்தி இந்தக் கல்விக் குழு ஐந்தாம் வகுப்பு வரை எந்த மாணவர்களையும் தடை செய்யக்கூடாது என்றும் அதன் பிறகு தேர்வுகளில் தேர்ச்சி அடையும் மாணவர்களையே அடுத்தத்த வகுப்புகளுக்கு அனுப்பவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இதில் கல்வி மறுக்கப்படுகிறது என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.

ஆனாலும், இதை மிகவும் கவனமாகக் கையாளவேண்டும் என்று இந்தப் பரிந்துரை வலியுறுத்துகிறது. மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று வாய்ப்புகளாவது வழங்கவேண்டும் என்றும், தேவைப்படும் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் அது அறிவுறுத்துகிறது.

தேர்வு முறையில் மாற்றங்கள் மாணவர்களின் சுயமரியாதையைக் கேள்விக்குள்ளாக்குகிறதா?
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத மாணவர்களில் பெரும்பாலானோர் கணக்கு மற்றும் அறிவியல் பாடத் தேர்வுகளில்தான் தோல்வி அடைந்திருக்கிறார்கள். எனவே இந்த இரண்டு பாடத்திலும் இரண்டு நிலையாகத் தேர்வு நடத்தலாம் என்றும் மேல்நிலைப் பாடங்களில் கணக்கோ அல்லது அறிவியலையோ பயிலாத மாணவர்களுக்கு எளிதான தேர்வு ஒன்றை அமைக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

பதினொன்றாம் வகுப்பில் பொறியியல் படிக்க நினைக்கும் மாணவர்களில் பலர் உயிரியல் படிப்பு படிப்பதில்லை. மருத்துவம் படிக்க நினைப்பவர்கள் கணக்கைப் பயில்வதில்லை. வணிகவியல் / பொருளாதாரம் பயிலும் மாணவர்கள் அறிவியல் பாடங்களைப் படிப்பதில்லை. மேல்நிலையில் என்ன பாடங்களைப் படிக்கப்போகிறோம் என்று முடிவுசெய்யும் மாணவர்கள் ஏன் தேவை இல்லாமல் கடினமான தேர்வுகளை எதிர்கொள்ளவேண்டும்?

இதுபோல பத்திரிகை, மாஸ் கம்யூனிகேஷன், விஷுவல் கம்யூனிகேஷன் துறைகளைத் தேர்வு செய்யும் மாணவர்களைக் கணக்கிலும் அறிவியலிலும் கடினமான தேர்வை எதிர்கொள்ள வைப்பது தேவையானதுதானா?

இரண்டு நிலைகளில் எந்த நிலையைத் தேர்வு செய்யலாம் என்ற தெளிவு மாணவர்களுக்கு இருக்காது என்று சொன்னால், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து உயர்வகுப்பில் எந்தத் துறை சார்ந்த படிப்பைப் படிக்கப் போகிறோம் என்று தேர்வு செய்யும் தெளிவு மட்டும் இருக்குமா? இதை ஏற்றுக்கொள்ளும்போது, புதிய கல்விக் கொள்கை முன்வைக்கும் நியாயமான ஆலோசனைகளை எதிர்க்கவேண்டியதன் அவசியம் என்ன?

இதுபோக, ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்வுக்குப் பதிலாக ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் ஒரு மாணவன் தேர்வெழுதும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை உள்ளது. ஆண்டின் இறுதியில் நடைபெறும் தேர்வு என்பது பல மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை அளிக்கிறது. அதை மாற்ற இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோல வருட இறுதியில் நடைபெறும் தேர்வை வைத்து மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கு பதில், தொடர்ச்சியான மதிப்பீட்டு முறை உருவாக்கப் படவேண்டும் என்றும் ஆலோசனை உள்ளது. இந்த முறையில் மாணவர்களின் மொத்த ஆளுமைத் திறனும் அளவிடப்பட்டுச் சரியான முறையில் அவர்கள் மதிப்பிடப்படுவார்கள். தேர்வு நேரத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற செய்திகளை நாம் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையின் அறிவுரைகள் இந்த அவலநிலைக்கு ஒட்டுமொத்தமான முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளன.

இன்றைய நிலையில் கல்வி என்பது கல்விக்கூடங்களில் மட்டுமே கிடைப்பதில்லை. கற்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்றன. எங்கே கிடைக்கும் என்பதையும், எப்படிக் கற்பது என்பதையும் பள்ளிக்கூடங்கள் சரியாகச் சொல்லிக்கொடுத்தால் போதும்.

ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் கொள்கைகளை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ தனிப்பட்ட மனிதர்களின் சுதந்திரம். இன்றையக் கல்விக் கொள்கை என்பது நாட்டை நாளை வழிநடத்தப்போகும் ஒரு முக்கியமான அறிக்கை. எனவே இதனை ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி, குறைந்தபட்சம் இந்த அறிக்கையை முழுவதும் படித்துவிட்டாவது அதைச் செய்யவேண்டும்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

தேசியக் கல்விக் கொள்கை - தொடர்ச்சி

தகவல் தொழில் நுட்பம் :

*  ICT ( Information, Communication, Technology ) துறைகளில் ஏற்பட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கல்வி கற்ப்பிக்கும் முறை மாறவேண்டும். இதன் முதல்படியாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இதற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.


நிதி ஒதுக்கீடு : 

*  தேசிய வருவாயில் 6% கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும். தொழில் சார்கல்விக்கும், வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுக்கான கல்விக்கான ஒதுக்கீடு என்பது தனியாக இருக்கவேண்டும்.

மொழிக் கொள்கை :

ஆரம்பநிலைக் கல்வி ( ஐந்தாம் வகுப்பு வரை ) தாய்மொழியிலேயே இருக்கவேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது மொழியைப் பயிலுவது என்பது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

உடல் பயிற்சி மற்றும் யோகா : 

இந்திய அளவில் பெரும்பாலான பள்ளிகளில் உடல்பயிற்சிக்கான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. உடல்பயிற்சிக்கான முன்னெடுப்பை கல்விநிலையங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

யோகா என்பது உலகிற்கு இந்தியாவின் கொடை.  கல்விக்கூடங்கள்  தொடக்கநிலை யோகா பயிற்சியை மாணவர்களுக்கு வழங்க முன்வரவேண்டும்.

தேர்வு சீர்திருத்தங்கள் : 

இன்றய கல்விமுறை மாணவர்களின் மனப்பாடம் செய்யும் தகுதியை மட்டுமே தேர்வு செய்வதாக இருக்கிறது. இது தேவையற்ற சுமையை மாணவர்கள்மீது திணிக்கிறது. கற்பது என்பது மாணவர்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக இருக்கவேண்டும், ஆனால்  நிலை அப்படி இல்லை. புத்தகங்களின் சுமையைக் குறைக்கவும், மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதையும் நாம் மாற்றவேண்டும்.

மனப்பாடம் செய்யும் முறையால் மாணவர்கள் தனிப்பயிற்சிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் முதல் தலைமுறையில் கல்விகற்பவர்களுக்கு, தனிப்பயிற்சி எடுக்கும் மாணவர்களோடு போட்டி இடுவது இயலாத ஒன்றாக இருக்கிறது.

மேலும் மனப்பாடம் செய்து 98% மதிப்பெண்ணுக்கும் அதிகமாக பெறுகின்ற மாணவர்களில் பலர் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற முடியாத நிலையும் இருக்கிறது. ஆண்டு இறுதியில் நடைபெறும் தேர்வு தேவையற்ற மனச்சுமையை மாணவர்கள்மீது திணிக்கிறது.

எனவே மாணவர்கள் தொடர்ச்சியான மதிப்பீடுமூலமாக மதிப்பிடப்பட வேண்டும். கற்றல் என்பது புத்தகங்களைத் தாண்டியும் இருப்பதுபோல மாற்றப்படவேண்டும். வெறும் மனப்பாடம் செய்தும் திறனைத்தாண்டி மாணவர்களின் புரிதலே அளவிடப்படவேண்டும்.

ஆண்டு இறுதியில் ஒரேமுறை நடைபெறும் தேர்வு என்பதற்குப் பதில்   10 மற்றும் 12 வகுப்புக்கான பள்ளி இறுதி தேர்வுகள் ஆண்டில் எந்த நாட்களில் வேண்டுமானாலும் கணினிமுறையில் நடத்தமுடியுமா என்பதை நாம் பரிசீலிக்கவேண்டும்.

12ஆம் வகுப்பிற்குப் பிறகு அகில இந்திய அளவில் தகுதித்தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினால், தொழில் கல்விக்கு பல்வேறு நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எழுதும் சுமையைக் குறைக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்வில் மாற்றங்கள் : 

கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில்தான் மிக அதிகமான மாணவர்கள் தேர்ச்சி அடைவதில்லை. அதனால் பத்தாம் வகுப்பிற்குப் பின் தொழிற்கல்வி பயில விரும்பும் மாணவர்களும், மேல்நிலை வகுப்பில் இந்த இரண்டு பாடங்களை பயில விரும்பாத மாணவர்களுக்கும் எளிதாக இருக்கும் வரையில் இந்த இரண்டு பாடங்களும் இரண்டு நிலைகளில் தேர்வு வைக்கலாம்.

எல்லா மாணவர்களுக்கும் பாடத்திட்டம் ஒன்றாகவே இருக்கும். ஆனால் மேல்நிலைப்பாடங்களில் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கு கடினமான தேர்வும், இந்தப்பாடங்களைப் பயிலத் தேவையில்லாத மாணவர்களுக்கு எளிதான தேர்வும் என்று மாற்றப்படலாம்.

மாணவர்களும் ஆரோக்கியமும் :

இன்றய நிலையில் இந்தியக் குழந்தைகளில் 62% வைட்டமின் A குறைபாட்டோடு இருக்கிறார்கள். 31% குழந்தைகள்  ஐயோடின் குறைபாட்டோடு இருக்கிறார்கள். 44% குழந்தைகள் இரவு உணவின்றி இருக்கிறார்கள். இந்த நிலையை இன்னும் சகித்துக்கொண்டு இருக்கக் கூடாது.

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை செய்யும் வசதியோடு கூடிய ஊர்திகள் உருவாக்கப்படவேண்டும். அவை எல்லா மாணவர்களின் உடல்நலத்தையும் பரிசோதித்து தேவையான மருத்துவச் சிகிச்சைகளை செய்யவேண்டும்.

மதிய உணவுத் திட்டம் : 

இந்தியாவில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிக்கப்படவேண்டும். இதோடு மாணவர்களுக்கான வைட்டமின் மாத்திரைகள் போன்ற மருத்துவ உதவியும் செயல்படுத்தப்பட வேண்டும்.

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதய வித்யாலயா :

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதய வித்யாலயாக்களின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது. இந்தப் பள்ளிகளின் தரத்திற்கு எல்லா அரசுப்பள்ளிகளையும் உயர்த்தும் திட்டம் தொடங்கப்படவேண்டும்.

இவை ஆரம்ப மற்றும் மேல்நிலைக் கல்விக்கான ஆலோசனைகள். 

புதன், 17 ஆகஸ்ட், 2016

தேசியக் கல்விக் கொள்கை - ஆசிரியர்கள், மாணவர்கள்

ஆசிரியர்கள் : 

ஆசிரியர்களுக்கான தகுதி, அந்தப் பணிக்கான தேர்வு முறை பற்றி வரைவு அறிக்கையின் பரிந்துரைகள்

* கல்விநிலையங்களின் மேலாண்மையிலும், ஆசிரியர் பணிக்கான தேர்வு மற்றும் பணி உயர்விலும் தெளிவான, வெளிப்படையான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அவை முற்றிலுமாகப் பின்பற்றப்பட வேண்டும்.

* தன்னதிகாரம் பெற்ற சுயேட்சையான ஆசிரியர் தேர்வுப் பணி ஆணையம் எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும். அதன்மூலமாகவே ஆசிரியர் பணிக்கான தேர்வு நடத்தப்படவேண்டும்.

* பத்தாம் வகுப்பிற்குப் பிறகு ஐந்து வருட ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆரம்ப / தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை இந்த வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

* இதுபோல பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு ஐந்து வருட ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை இந்த பயிற்சி முடித்தவர்களிடம் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

* இந்தத் தேர்வில் வெற்றிகரமாக முடித்து உள்ள மாணவர்களுக்கு ஒரு வருட உயர்நிலைப் பட்டய வகுப்புகள் நடத்தி, அதில் உள்ள மாணவர்களை உயர்நிலை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.

*  பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பின்னர் ஆசிரியர் பணி புரிய ஆசையும் தகுதியும் உள்ள மாணவர்களுக்கு நான்கு வருட பட்டப்படிப்பு வழங்கப்படவேண்டும். ஆசிரியர் பணிக்கு இந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

*  மலைவாழ் பகுதிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க, அந்தப் பகுதியைச் சார்ந்த பெண்களுக்கு அரசின் செலவில் ஐந்து வருட ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டு, அப்படிப் பயிற்சி பெற்ற பெண்களையே பணியில் அமர்த்தவேண்டும். இந்தப் பயிற்சி எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஐந்து ஆண்டுகளாகவோ அல்லது பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளாகவோ இருக்கலாம்.

 *  ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இரண்டு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பவேண்டும்.

*  பத்து வருட இடைவெளியில் ஆசிரியர்களின் திறன் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களின் தரன் தன்னாட்சியான நிறுவனத்தால் அளவிடப்பட்டு ஆசிரியர்களுக்கு சான்றளிக்கப்பட வேண்டும்.

*  கல்லூரி விரிவுரையாளர் தகுதியில் உள்ள நபர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி நடத்தப்பட வேண்டும். இதற்காக தனியான தகுதியான பயிற்சியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டவேண்டும்.

* மலைவாழ்பகுதிகள், தொலைதூர இடங்கள், வாழக் கடினமான இடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை தரப்படவேண்டும்.

*  இந்திய குடிமைப் பணிகளுக்கு ( Civil Service ) இணையான இந்திய கல்வி பணி ( Indian Educational Service ) ஓன்று உருவாக்கப்பட வேண்டும். இதில் பணிபுரிபவர்கள் அவரவர் மாநிலத்தின் கல்வி முன்னேற்றத்திற்க்காக பணியாற்றவேண்டும்.

*  தங்கள் பணியில்  ஆசிரியர்களும், பல்வேறு முறையீடுகளுக்காக கல்வி நிலையங்களும் அரசின் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து உள்ளனர். இவைகளை விரைவாகத் தீர்க்கும் வண்ணம் மாநில அரசுகளும், மத்திய அரசும் தீர்ப்பாயம் ஒன்றை நிறுவவேண்டும். இந்த வழக்குகள் விரைவாக முடிக்கப்படவேண்டும்.

மாணவர்கள் :

 * மாணவர்கள் கல்விகற்கும் நிலையில் மூன்று இடங்களில் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அவை தொடக்கக்கல்வி நிலையில், பதினொன்றாம் வகுப்பில் மற்றும் தாய்மொழியில் கற்கும் மாணவர்கள் தொழிற்கல்வி கற்கும் ஆரம்பநிலையில் என்பனவாகும். இந்தக் காலகட்டத்தில் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளும், தனி கவனிப்பும் அளிக்கப்படவேண்டும்.

*  சிறுபான்மைக் கல்வி நிலையங்களும் தங்கள் சேர்க்கையில் 25% பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தல்வேண்டும்.

*  எட்டாம் வகுப்பு வரை எல்லா மாணவர்களுக்கும் தேர்ச்சி என்பது, பல மாணவர்களுக்கு கற்கும் தேவையை எதிர்மறையாகப் பாதித்து உள்ளது. எனவே இது ஐந்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்று மாற்றப்படவேண்டும். அதன் பிறகு தேர்ச்சி என்பது மாணவர்களின் மதிப்பெண்படியே அமைய வேண்டும்.

ஆனால் இது மாணவர்களை பாதிக்காமல் இருக்க, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு மீண்டும் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். இதற்கான சிறப்பு வகுப்புகள் தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

*  கல்வி உரிமைச் சட்டம் ஐந்தாம் வயதான குழந்தைகளுக்கு கல்வி கற்பது உரிமை என்று இருக்கிறது. அது நான்கு வயதான குழந்தைகளுக்கும் இனி நீட்டிக்கப் பட வேண்டும். நான்கு வயதான குழந்தைகளுக்கான மழலையர் வகுப்புகள் தொடங்கப்படவேண்டும்.

* கற்றல் குறைபாடு உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட குழைந்தைகளுக்கான கல்விக்கான தனி சட்டம் நிறைவேற்றப்படவேண்டும், அவை முறையாகப் பின்பற்றப்படவேண்டும்.

* மலைவாழ் பிரதேசங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிகளில் சேரும் சதவிகிதம் குறைவாகவும், பாதியில் படிப்பை நிறுத்துவார்கள் சதவிகிதம் அதிகமாகவும் இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும்.

* மலைவாழ் பகுதி குழந்தைகளுக்கான கல்வி என்பது மலைவாழ் மக்கள் நலத்துறையில்  பிரிக்கப்பட்டு அந்தந்த மாநில கல்வித்துறையில் தனி அலகாக மாற்றப்படவேண்டும்.

* பல இடங்களில் உள்ள மலைவாழ் குழைந்தைகள் அந்த மாநில மொழிகளைக் கற்பதில் ( அவர்களின் பேச்சு மொழி வேறாக இருப்பதால் ) உள்ள தடைகளைக் களைய, ஆரம்ப நிலைப் பாடங்களை அவர்கள் மொழியில் கற்பிக்கும் வகையில் புத்தகங்கள் தாயாரிக்கப்படவேண்டும். 

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

New Education Policy - Language


6.13.1 India is an ancient civilisation characterised by numerous and diverse languages. According to the 2001 Census, India has 122 major languages and 1,599 other languages. As many as 60 major languages are spoken by more than 1 lakh people, and 30 of these are spoken by more than 10 lakh people.

6.13.2 The languages in India come from many different language groups. Apart from the major languages belonging to the Indo-Aryan group, spoken by 75% of the population, and the Dravidian group, spoken by an additional 20%, there are other languages spoken in India which belong to the Austro-Asiatic, Sino-Tibetan, other minor language groups such as Tai-Kadai and Great Andamanese, as well as isolates. More than three millennia of language contact has led to significant mutual influence among the four predominant language families in mainland India and South Asia.

6.13.3 Hindi is the most prominent and wide-spread language in India. It is spoken by over 40 crore people (2001 Census) and serves as the lingua franca across much of North and Central India. The number of native Hindi speakers is around 25% of the population. However, when other dialects of Hindi spoken in the Hindi belt, such as Braj Bhasha, Haryanvi, Bundeli, Kannauji, Hindustani, Awadhi, Bagheli and Chhattisgarhi, are taken into account, more than 40% of the population speaks the Hindi language.

6.13.4 Article 343 (1) of the Constitution designates Hindi written in the Devanagari script as the official language of the Union. However, Article 343 (2) and the Official Languages Act of 1963 allow for the continuation of English in official work.

6.13.5 The Constitution makes special provision for the propagation of Hindi as the official language of the Union. Article 351 states: “It shall be the duty of the Union to promote the spread of the Hindi language, to develop it so that it may serve as a medium of expression for all the elements of the composite culture of India and to secure its enrichment by assimilating without interfering with its genius, the forms, style and expressions used in Hindustani and in the other languages of India specified in the Eighth Schedule, and by drawing, wherever necessary or desirable, for its vocabulary, primarily on Sanskrit and secondarily on other languages.”

6.13.6 In addition the Constitution recognises a number of official regional languages which are listed in the Eighth Schedule, as amended by the 21st, 71st and 92nd Amendment Acts. The Eighth Schedule currently lists 22 such languages, including Hindi.

6.13.7 Communication between States which use Hindi as their official language is required to be in Hindi. Communication between a State whose official language is Hindi and one which uses another official language is required to be in English, or in Hindi with an accompanying English translation (unless the translation is dispensed with by mutual agreement).

6.13.8 The Three Language Formula (TLF) evolved as a negotiated compromise solution to accommodate the strong views of the State Governments and has governed the implementation of language policy for the last 50 years. The TLF was formulated by the then Education Ministry of the Government of India in consultation with the State Governments and enunciated in the 1968 National Education Policy resolution.

6.13.9 Under the TLF, the languages that each child must compulsorily learn in school are as follows:
(i) The First language to be studied by a child must be the mother-tongue or the regional language.
(ii) The Second language – in Hindi speaking states should be some other Modern Indian language (MIL) or English;
(iii) In non-Hindi speaking states should be Hindi or English; and
(iv) The Third language – in Hindi speaking states will be English or a Modern Indian Language (MIL) not studied as the Second language; in non-Hindi speaking states will be English or Hindi not studied as the Second language.

6.13.10 Under the TLF, every child is expected to learn three languages, namely, the mother-tongue, Hindi and English. In Hindi speaking States, children are to be taught Hindi, English and one of the Modern Indian languages.

6.13.11 Not all States are providing education in three languages up to the secondary stage; in fact the variations in so many states, as well as local variations within states are of such nature that it can be even argued that the TLF is observed more in the breach than as a national policy. In some States, only two languages, the State language and English are being taught, presumably for political reasons. In some of the Hindi-speaking States the TLF is often interpreted as providing for the study of Sanskrit in place of any other modern Indian language; indeed contrary to the spirit of TLF no South Indian language is generally taught in most schools in Hindi speaking states. Some Boards of School Education allow students to pass the secondary school examination with only English and another foreign language, permitting them even to avoid learning Hindi or any regional language.

6.13.12 Children are born with an innate language faculty. Most children are able to pick up and internalise the complex rules of one or more languages even before they start their schooling. In many cases, children come to school with the ability to use two or three languages both accurately and appropriately. Even differently-abled children who do not use the spoken language develop equally complex alternative sign and symbol systems for expression and communication with ease and facility.

6.13.13 In implementing a language policy, primacy should be given to the mother tongue as the medium of instruction in the initial stages, before the child enters primary school. This is imperative, as repeated studies have indicated that basic concepts of language and arithmetic are best learnt in one’s mother tongue. Indeed, a child learns the mother tongue naturally from her home and societal environment. At the pre-primary level and in Anganwadis, the emphasis should be on reinforcing this knowledge and establishing a sound foundation for all future education based on the children’s mother tongue, including tribal languages.

6.13.14 Hindi and/or English could be introduced as languages right from Class 1, preferably only one of these, when the child begins regular school at the age of six. Proficiency in these languages, besides the mother-tongue, will empower the child in due course to communicate outside her own language group for practical purposes like business, tourism, cultural exchange, administration and social work.

6.13.15 While the mother tongue can continue to be the medium of instruction, the study of Hindi is desirable to bring all Indians together as citizens of a single nation. The study of English is equally of importance to enable her to transcend geographical boundaries and function effectively at the national and international level.

6.13.16 For many Indian families, including those in rural areas, acquiring a degree of proficiency in English is an aspirational goal. This is a major reason why parents prefer to send their children to private schools offering English language courses. English is also the predominant language of the internet. These are compelling reasons for the teaching of English in Government schools. Stress should be laid on promoting conversational English and Hindi, so that the child feels comfortable in using these languages in everyday life. Indeed the early teaching of additional language should be conversational based, rather than regress grammar/syntax-based, which often makes learning a language so complicated and difficult at an early age.

6.13.17 Suitable courses in Hindi and English should also be available in universities and colleges with a view to improving the proficiency of students in these languages up to the prescribed university standards.

6.13.18 The Committee agrees with the view expressed in the 1968 NPE that: “The energetic development of Indian languages and literature is a sine qua non for educational and cultural development. Unless this is done, the creative energies of the people will not be released, standards of education will not improve, knowledge will not spread to the people, and the gulf between the intelligentsia and the masses will remain, if not widen further.”

6.13.19 The study of Sanskrit requires special emphasis, as it is still inextricably linked with the life, rituals, ceremonies and festivals of the people and is a window to the rich cultural, philosophical, artistic and scientific heritage of India. Knowledge of Sanskrit is a window to languages and cultures in many states.

6.13.20 Keeping in view the special importance of Sanskrit to the growth and development of Indian languages and its unique contribution to the cultural unity of the country, facilities for teaching Sanskrit at the school and university stages should be offered on a more liberal scale.
6.13.21 In some States, Sanskrit is already being taught as a compulsory subject from Classes 6 to 8. Sanskrit may be introduced as an independent subject at a suitable point of the primary or the upper primary stage. At the secondary stage, Sanskrit may be offered as an additional option and at the higher secondary stage suitable elective courses in Sanskrit may be made available to all those students who wish to study it. Open school courses for Sanskrit may also be designed for learners at all levels.

6.13.22 In designing Sanskrit courses and curriculum, the language should not be treated as a ‘classical’ language but as a living phenomenon which is still relevant to the general life needs of the people of India. Old timers would remember that teaching of Sanskrit through the Bhandarkar method puts off many students, arising from the undue early stress on grammatical perfection, rather than provide the ability to get a feel for the language through usage, and stress on the ‘roots’.

6.13.23 Development of new methods of teaching the language should be encouraged, and the possibility explored of including the study of Sanskrit in those courses (such as modern Indian languages, ancient Indian history, Indology and Indian philosophy), where such knowledge would be useful for an understanding of the subject is useful.

6.13.24 In addition, it would be useful for schools which have the capacity to do so, to offer foreign languages such as German, French, Russian or Arabic at the secondary or senior secondary stages. Every new language provides fresh perspectives and opens new prospects for the learner. However, these should be entirely left to the interest of students to take new languages either for special personal reasons or out of general inclinations.

Recommendations

6.13.25 The Committee recommends that the medium of instruction up to Class V must be the mother tongue or regional language.

6.13.26 The Three Language Formula (TLF) has been a part of the Education Policy of the country right from 1968 and continued through 1986/92. The Committee learnt during its interactions that the Three Language Formula has not been uniformly implemented in many states. With the passage of time the states have responded to local aspirations and preferences voiced by parents who would like their children to possess language communication skills that can facilitate intra-state, intra-regional as well as global mobility. Keeping this in mind, the Committee recommends that as long as the states ensure that the mother tongue or the regional language forms the basis of primary education up to Class V (a fact underscored by the earlier two policies) the choice of the second (at primary level) and third language (at secondary level) should be left to individual states to decide.

சனி, 13 ஆகஸ்ட், 2016

தேசியக் கல்விக் கொள்கை - உண்மையும் பொய்களும்

வழக்கம்போல தேசிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டம் பற்றிய பொய்களை நமது அறிவுஜீவிகள் அடித்துவிட ஆரம்பித்து விட்டனர். அவர்களின் வழக்கமான ஜல்லிகளும், உண்மைகளும் என்ன என்று பார்ப்போம்.


இந்தக் கல்விக் கொள்கையை எதோ சில தனிநபர்கள் வடிவமைத்து உள்ளனர். கல்வியாளர்களிடமோ, பொதுமக்களிடமோ கருத்துக் கேட்கவில்லை என்று கூறுகின்றனர்.

உண்மை என்னவென்றால் தொடக்கக்கல்வி, மேல்நிலை மற்றும் உயர்நிலைக்கு கல்வி, தொழில்சார் கல்வி, பள்ளிகளின் தேர்வு முறை, ஆசிரியர்கள் பணிக்கான படிப்பு மற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறை, பெண்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மை மக்களின் கல்வியறிவை மேம்படுத்துதல், கணிணிகளின் பயன்பாட்டின்மூலம் கல்வி கற்றுத்தரும் முறையை முன்னெடுத்தல், கல்வி கற்ப்பிக்கும் முறையில் புதிய நவீன முயற்சிகள், கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் வழிமுறைகள், தாய்மொழி வழியாக கல்வி புகட்டுவதில் இன்று உள்ள சவால்களும் அதனை வெற்றிகாணும் வழிமுறைகளும், உடல்பயிற்சி, வாழ்க்கையை எதிர்கொள்ளும் முறை, கலைக்கல்வி,  நன்னெறிகளை பற்றிய அறிவைப் புகட்டும் வழிமுறைகள், மாணவர்கள் ஆரோக்கியம் என்ற தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

இதற்கான கலந்தாய்வுகள் கிராமப் பஞ்சாயத்தில் தொடங்கி, கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் பின்னர் மாநில அளவிலும் நடத்தப்பட்டன. இவற்றில் கிடைத்த ஆலோசனைகள் தொகுக்கப்பட்டு தேசியஅளவில் ஆறு மண்டலங்களில் விவாதிக்கப்பட்டன.

பலநேரங்களில் அன்றய மனிதவளத் துறை அமைச்சர் திருமதி ஸ்ம்ரிதி இரானி அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாகக் கலந்து கொண்டார்.


இந்தக் கூட்டங்கள் பற்றிய சில செய்தித் தொகுப்புகள் 









இதுபோலவே அரசு இனி கல்வியில் எந்த முதலீடும் செய்யப்போவது இல்லை. ஐந்தாம் வகுப்பிலேயே மாணவர்கள் வடிகட்டப்பட்டு தொழில்கல்விக்கு அனுப்பிடப்பட்டுவிடுவார். மத்திய அரசு சமிஸ்கிரத மொழியைத் திணிக்கப் போகிறது, பள்ளிகள் அருகே உள்ள மடங்களோடு இணைக்கப்பட்டு விடும் என்று ஏதேதோ வதந்திகளை பொய்களை பரப்பிக்கொண்டு இருக்கின்றனர்.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு என்ன சொல்கிறது என்பதை பாப்போம். 

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

தேசியக் கல்விக் கொள்கை

2014 - 2015ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 15 லட்சம் பள்ளிகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. அவற்றில் 75% தொடக்கப் பள்ளிகளும், 43% மேல்நிலைப்பள்ளிகளும் 40% உயர்நிலைப் பள்ளிகளும் அரசால் நடத்தப்படுகின்றன. மற்றப் பள்ளிகள் தனியார்களால் நடத்தப்படுகின்றன.

இந்தப் பள்ளிகளில் 25.95 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் 19.77 கோடி மாணவர்கள் தொடக்கக் கல்வியும் 3.83 கோடி மாணவர்கள் மேல்நிலைப் படிப்பும் 2.35 கோடி மாணவர்கள் உயர்நிலைப் படிப்பும் படிக்கின்றனர்.

தொடக்கக் கல்வியில் 33% மாணவர்களும், மேல்நிலை வகுப்புகளில் 39% மாணவர்களும் உயர்நிலைப் படிப்பில் 42% மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

மொத்தம் உள்ள பள்ளிகளில் 33% பள்ளிகளில் ஐம்பதிற்கும் குறைவான மாணவர்களும், 54% பள்ளிகளில் நூற்றுக்கும் குறைவான மாணவர்களுமே இருக்கின்றனர். ஏறத்தாழ 77% பள்ளிகள் இருநூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டு இயங்குகின்றன.

ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களில் பத்தில்  ஆறு மாணவர்களே எட்டாம் வகுப்புவரை படிக்கிறார்கள். 47% மாணவர்கள் பத்தாம் வகுப்பைத் தாண்டுவது இல்லை.

இந்த மாணவர்களுக்கு கல்வி கற்ப்பிக்கும் பணியில் 80 லட்சம் ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளிகளிலும் 20 லட்சம் ஆசிரியர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 59% ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் பணியாற்றினாலும் 8% பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே இன்னும் இருந்து வருகின்றன.

தொடக்கப் பள்ளி அளவில் ஏறத்தாழ 5 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமலே இருக்கிறது. 14% அரசுப் பள்ளிகள் குறைந்த பட்ச இலக்கான 6 ஆசிரியர்கள் என்ற எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை. மலைவாழ் பகுதிகளிலும், தொலைதூரத்தில் உள்ள கிராமப் பகுதிகளிலும் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையே நீடிக்கிறது.

1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது 12% இருந்த எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் சதவிகிதம் 2011 ஆம் ஆண்டு 74%ஆக உயர்ந்து உள்ளது. இன்று 82.1% ஆண்களும் 65.5%  பெண்களும் இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்கள். ஆனால் உலகளவில் கல்வி பெற்றவர்கள் 82.1% என்று இருக்கும் போது, நாம் கிடைக்கவேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

1968 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கைக்கான குழுக்கள் ஆண்டு ஒன்றுக்கு தேசிய வருமானத்தில் 6% கல்விக்காக ஒதுக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்து இருந்தாலும், சராசரியாக 3.5% என்ற அளவிலேயே கல்விக்கான ஒதுக்கீடு இருக்கிறது.

அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளோடு தொடங்கப்பட்ட சர்வ சிக்க்ஷ அபியான்  என்ற தொடர் நிகழ்ச்சியின் மூலமாகவும், எட்டாம் வகுப்பு வரை தடை இல்லாக் கல்வி மூலமாகவும் ஆரம்பநிலைக் கல்விக்கு மாணவர் சேர்க்கை 95% மேலாக உயர்ந்து உள்ளது.

ஆனால் 17,000 கிராமங்களை உள்ளடக்கிய 570 புறநகர் மாவட்டங்களில் மூன்று முதல் பதினாறு வயதிற்கு உட்பட்ட  6 லட்சம் மாணவர்களிடம் பிரதம் என்ற அரசு சாரா அமைப்பு 2014ஆம் ஆண்டு அளித்த அறிக்கை மகிழ்ச்சிகரமாக இல்லை. இந்த அமைப்பின் அறிக்கையின் படி ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் சரி பாதிப் பேருக்கு இரண்டாம் வகுப்பிற்கான புத்தகங்களை படிக்கவோ அல்லது இரண்டாம் வகுப்பிற்கான கணித அறிவோ இல்லை என்று தெரிய வருகிறது.

மாணவர்களின் சேர்க்கையில் நாம் அடைந்த முன்னேற்றம் மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், மாணவர்கள் கற்கும் அளவு என்பது கவலைக்கிடமாகவே இருக்கிறது.

மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 75% பேரும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 50% பேரும் எட்டாம் வகுப்பு மாணவர்களில் 25% பேரும் இரண்டாம் வகுப்புக்கான பாடங்களைப் படித்து புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.    கிராமப்புற மாணவர்களில் இரண்டாம் வகுப்பு மாணவர்களில் 32.5% பேர் எழுத்துக்களைக் கூட இனம் காண முடியாமல் இருக்கிறார்கள்.

எந்த ஒரு வேலை நாளிலும் ஏறத்தாழ 25% ஆசிரியர்கள் விடுப்பில் இருப்பது என்பது இந்தக் கற்றல் குறைபாட்டின் ஒரு முக்கியமான காரணமாக் கண்டறியப்பட்டு உள்ளது.

மாணவர்கள் சேர்க்கையில் பெண்குழந்தைகள், பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினரின் சேர்க்கை எண்ணிக்கை திருப்திகரமாக இருந்தாலும், கற்றலின் அளவில் பொருளாதார அளவில் பின்தங்கிய மாணவர்களும்,  முதல்தலைமுறை மாணவர்களும் பின்தங்கியே இருக்கின்றனர். இவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்காமல் போய்விடும் சாத்தியக்கூறும் இருக்கிறது. இதைத் தடுப்பதே நமக்கு முன் உள்ள சவால்.

இந்தியாவில் பட்டப் படிப்பும் பட்ட மேற்படிப்பும் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் என்பன

1, பாராளுமன்றத்தின் சட்டத்தால் உருவாக்கப்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள்
2, மாநில அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்
3, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
4, பல்வேறு மாநில அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள்
என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

பட்டம் வழங்கும் அதிகாரம் இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளன. மிகச் சிறிய எண்ணிக்கையிலான மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் தனித்து இயங்கினாலும், பெருவாரியான பல்கலைக்கழகங்கள் தங்களோடு இணைந்துள்ள கல்லூரிகள் வழியாகவே கல்வி புகட்டுகின்றன.

இன்றய நிலையில் 46 மத்திய பல்கலைக்கழகங்களும் 128 நிகர்நிலைப் பல்கலைக்கலகங்களும் இந்தியாவில் இயங்கி வருகின்றன. 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்த நிறுவனத்திற்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கப்படவில்லை.  2014 - 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 711 பல்கலைக்கழகங்களும் 40,760 கல்லூரிகளும் இந்தியாவில் உள்ளன.

1,79 கோடி ஆண்களும் 1.54 கோடி பெண்களும் என்று மொத்தம் 3.33 கோடி மாணவர்கள் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இவர்களுக்குப் பாடம் எடுக்க 14 லட்சம் ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள், அவர்களில் 39% பெண் ஆசிரியர்கள்.

இந்த மாணவர்களில் 37.41% கலைப் பிரிவிலும், 17.59% அறிவியல் துறையிலும் 16.39% வணிகவியல் மற்றும் மேலாண்மைத் துறையிலும் 28.61% பொறியியல் மற்றும் மருத்துவத் துறையிலும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மொத்தம் உள்ள கல்லூரிகளில் 63.9% கல்லூரிகள் தனியார் நடத்துபவை, அவற்றில் 58.9% மாணவர்கள் படிக்கிறார்கள். மாநில அரசால் 35.6% கல்வி நிறுவனங்களும் மத்திய அரசால் 0.5% நிறுவனங்களும் நடத்தப்படுகின்றன.

ஆனாலும் உலகளாவிய தரவரிசைப் பட்டியலில் நமது கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இடம்பெறவில்லை. 147ஆவது இடத்தில IISc Banglore, 179ஆவது இடத்தில் IIT Delhi, 202ஆவது இடத்தில IIT Mumbai மற்றும் 271ஆவது இடத்தில IIT Kanpur ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன.

படித்த படிப்பிற்கான வேலை என்பது பலருக்குக் கிடைப்பதில்லை, அதே நேரத்தில் தகுதியான ஆட்கள் நிறுவனங்களுக்கு கிடைப்பதில்லை என்ற நிலைதான் உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கான தேவையும், படிப்பும் ஒரே திசையில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

இதன் பின்புலத்தில் நமது கல்விக் கொள்கை எப்படி அமையவேண்டும் என்பதை பற்றிய புதிய தேசியக் கல்விக் கொள்கை அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளது.  

ஞாயிறு, 31 ஜூலை, 2016

TM Krishna and Rajesh Garga

Mr T M Krishna has been conferred with Magsaysay Award for his outstanding special work on making Carnatic music available to masses and learned people have divided into two parts and questioning the logic and reason behind the award. A section of people say that Mr Krishna is not a great singer, but the award is not been given for his musical talents but for this path breaking work. Learned friend Mr Rajesh Garga has supported the award committee and feels that inclusiveness is missing in this art form.  Please read his blog and find out his reasons for his stand.


But I beg to differ from Mr Garga on the following grounds.

//Is this art form inclusive today? From my understanding the answer is sadly no. It is learnt, performed, appreciated and administered only by the Brahmin community. If there is anyone involved from outside of this community, they would be more of an exception to the rule. //

Honestly I am at a loss to understand the meaning of the word inclusiveness. People will have different tastes, what appears tasty need not be taken as good by others. Someone likes Carnatic music and someone like villuppaatu, someone like therukkuthu, we need to have space for all art forms and why should we make everyone to learn only one art form? For that matter any art or sports or music or films will have only a selected audience and that is the segment for which it is been performed.

//And if we were to talk about non Hindus, the list would be basically be zero. //

Music is haram to certain religious people and when it is prohibited by their holy book or interpreted so, how could you expect them to learn it.  Why should we bear the cross for their point of views?

For the other major religious group, hope you should be aware of Kalaikavery of Trichy and other similar organizations. Most of the churches have their own band which conducts musical festivals to impress people to propagate their religion, and all the players are from their own religion, but let us not talk about inclusiveness there, because it will be against our secular and intellectual credentials )))

And for sure any art form developed in this land has a huge influence from Hinduism. What is wrong in accepting it? If you want to know what will happen if you want to delink or cut off the Hindu roots, please read this story 



//In states like Tamil Nadu, this art form has been labelled Brahminical and has been actively discouraged. I do not know what is done in the music college and its likes in Tamil Nadu.//

On one hand people say that Carnatic music is braminical and should be discouraged and on the other hand says that they do not have an opportunity to learn it. My left foot boss for those intellects.

And if you want to know what is done in the music colleges and its likes in Tamil nadu, pl check this link to find out


If someone has to question, they need to question this institutions that have been set up to teach the art to masses and not the performers or the Sabas and their office bearers. The list of music and other art institutions are listed here for your ready reference.


//All the composers that Jataayu has mentioned have all sung about Hindu Gods and today this music is almost uni-dimensional in the Bhakti format. It is only the Sanjay Subramaniams and the TM Krishnas who are trying to bring in varied compositions be it from Tamil classic literatures or from other languages. I am yet to see someone sing anything on social issues or even the Bhakti aspect to include other religions. Where is inclusiveness here? //

Most of the compositions are on bakthi format, because Hindus feel that music is a way to reach out to the God Almighty and the religion has given scope and canvas to treat God Almighty as a friend, guide, philosopher, lover and countless forms whichever one feels comfortable with, this kind of freedom is totally prohibited in most of the other religion. When there is a scope, people use their imagination and creativity and when it is blocked what else one can expect? In the name of inclusiveness do you want us also to follow their footsteps sir?

And performers sing what is available to them and if social causes need to be addressed through music we need someone who can write the lyrics, someone who can compose music and someone with a good voice or skill to perform. It is a team effect. It is childish to get into blame game, people do it because they find it very easy. Lighting a lamp is always better than to curse the darkness, but by cursing the darkness that to on a loud voice make others to look at you and make you to be eligible for special awards. TMK has achieved his goal, nothing more nothing less. I am sorry, lighting a lamp is Hindu way of life so we need to change it to Switching a tube light is better than to curse darkness – I would also like to be in the cozy team of intellects ))) 

 //Today this music has gone into the firewalled zones of sabhas and it is exclusively managed by Sabha officials, who determine when and where, who can perform and who cannot. Stories of fledgling performers paying their way to get on to the schedules are plenty. Should we take a census of who runs these sabhas these days? Inclusiveness? My foot!//

Music has gone into the firewalled zones of Sabhas, because Temples which use to conduct such programs are handled by the Govt which is headed by people who do not know any idea about the art form. Free the temples from the clutches of govt and make temples to support such events which will give you a long lasting effect.

For the famous December Season, audience come in good numbers only for renowned and famous musicians and the afternoon and evening slots have very few people. Underrated performers paying their way to get on the schedules are plenty, not only in Carnatic music but also in all other art forms and sports, where regularly we come across such allegations, why point out this one?

Who prevented others from creating their own space which can be exclusively for non-brahmins to perform and to enjoy? Could anybody can stop it? What is the status of Tamil Isai Kalagam started by Raja Sir Muthiah Chettiyar?  How much support tamil speaking people have given to Tamil Isai in Tamilnadu?

Atleast our Dravidian intellects could have written songs praising EVR, Anna, Karunanithi, MGR, JJ etc. Could anybody prevent them from doing it?

And Rajesh Garga Sir, it takes years to become proficient in any art form / sports. Why people do not show interest is just because even after such tedious work, there is no guarantee that they can be successful in that field. If there is a confirmation of making money is ensured, you can see a huge bunch of people rushing into any art form.

Also it not just the skills that make one successful in any art or sports, what is more important is the person’s attitude. How many people have that kind of attitude to sustain and put in that kind of rigorous work to make one successful?


Let us leave Carnatic music, even I don’t think most of the people are not in a positon to appreciate painting, does it mean that painting is managed and manipulated by Brahmins? People in Tamilnadu may not be in a position to appreciate Mohiniattam, Kadakkali, Kadak, Symphony Orchestra etc etc, whom will Mr Krishna blame for this sir ?

I am a Brahmin by birth and I have no taste for such fine arts, be it Carnatic music or barathanatiyam, where as I can point out my friends who are not Hindus who can appreciate Carnatic music, how can one explain this? Simple, they have a liking and they were able to get guidance from proper masters, that’s all.

Blaming all the ills and mistakes of the society for Brahmins is a very comfortable way of escapism and Mr Krishna is just doing that for which he has been handsomely rewarded.


Let me sum up sir, even in this issue most of us cannot look eye to eye and can I say that the award is not inclusive? 

வியாழன், 10 மார்ச், 2016

கண்முன்னே நிகழும் அற்புதம்

இந்த நாட்டில் திரு நரேந்திர மோடியைப் போல பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் பழிக்கப்பட்டவர்கள் யாரும் இருந்து இருக்க முடியாது.அவர்மீதான வன்மம் என்பது எல்லா வரைமுறைகளையும் தாண்டி தங்களைத் தாங்களே அறிவுஜீவிகள் என்று நினைத்துக்கொண்டு  இருப்பவர்களால் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. அதனால் நியாயமாக அவருக்கும், அவர் தலைமையில் அமைத்த அரசுக்கும் கொடுக்கவேண்டிய பாராட்டுக்களைத் தெரிவிக்கவே இவர்கள் தயாராக இல்லை. ஆனால் இன்றைய உலகம் என்பது இப்படிப்பட்ட அறிவுஜீவிகளைத் தாண்டி இணையத்தின் வழியாக தனக்கான செய்திகளைத் தெரிந்து கொள்கிறது.

குஜராத் மாநிலம் என்பது மோதிக்கு முன்னாலே எல்லா வளமும் பொருந்திய மாநிலம், பொதுவாகவே குஜராத்திகள் வியாபாரம் செய்யத் தெரிந்தவர்கள். அப்படிப்பட்ட வளமான மாநிலத்தில் எதுவுமே செய்யாமல் அந்தப் பெருமைகளை எல்லாம் தான் செய்ததாக மோடி தம்பட்டம் அடித்துக்கொண்டார் என்பது இவர்கள் கட்டமைக்கும் பிம்பம். உண்மை என்ன என்று பார்ப்போம்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான மிக முக்கியமான குறியீடு என்பது சாதாரணப் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் மின்சார வசதி செய்துகொடுப்பதே ஆகும். அதுவே வளர்ச்சிக்கான அடிப்படை. இதில் மோதிக்கு முன்னரும் மோடி ஆட்சி செய்தபோதும் குஜராத் எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.

2008ஆம் ஆண்டு குஜராத் மிக மோசமான மின்சாரத் தட்டுப்பாட்டைச் சந்தித்தது.தொழில்சாலைகள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும்படி அறிவுறுத்தப் பட்டன. விலை குறைவான திரவமாக்கப் பட்ட இயற்கை எரிவாயுவுக்குப் ( LNG ) பதிலாக விலை அதிகமான நாப்தாவை அங்கே உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் பயன்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.

மற்றைய மாநில முதல்வர்கள் போல மோடி மத்திய அரசு உதவி செய்யவில்லை, தங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்துகிறது என்று குறைகூறிக்கொண்டு இருக்கவில்லை. உடனடியாக குஜராத் அரசு மின்சார உற்பத்தியைப் பெருக்க என்ன செய்யலாம் என்று விவாதித்து, முடிவெடுத்தது. அதன் பிறகு சூரிய வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களை  ஊக்குவித்து, மின்சார தயாரிப்பில் தன்னிறைவு அடைந்தது.

இது சம்பந்தமான செய்திகள் இங்கே

ஆக, மின்சாரம் தயாரிப்பதில் குஜராத் ஏற்க்கனவே தன்னிறைவு அடைந்து இருந்தது என்கிற இவர்கள் வாதம் உண்மை இல்லை என்பது உறுதியாகிறது.


2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலம் வறட்சியில் சிக்கியது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கிறது, எனவே மோடியால் அந்த ஆண்டு தேர்தலில் வெல்ல முடியாது என்று பத்திரிகைகள் கட்டியம் கூறின. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மோடி தனது முக்கியமான பணிகளாக குடிநீர், மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளே இருக்கும் என்று உறுதி கூறினார்.

2004ஆம் ஆண்டு சுபலாம் சுஜலாம் யோஜனா என்ற பெயரில் 6000 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதியும் 3700 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீரும் வழங்கும் திட்டம் செயல்படுத்தத் தொடங்கியது.

இதன் விளைவாக குஜராத் உணவு உற்பத்தியில் 9% வளர்ச்சியை அடைந்தது, அப்போது தேசிய அளவில் விவசாய வளர்ச்சி என்பது 3% மட்டுமே இருந்தது. குஜராத் மாநிலத்தின் இந்த வளர்ச்சியை திரு அப்துல் கலாம் அவர்கள் பாராட்டிய செய்தி இங்கே

ஆக மின்சாரத்திலும் குடிநீர் விநியோகத்திலும் நிச்சயமாகவே திரு மோடி அவர்கள் குஜராத்தில் மகத்தான ஒரு சாதனையைப் புரிந்து இருக்கிறார். இதற்கான பாராட்டுகளைத் தெரிவிக்க மனம் இல்லாவிட்டாலும், ஏற்கனவே குஜராத்தில் எல்லாமும் இருந்தன என்றாவது கூறாமல் இருக்கலாம் அல்லவா ?

மோடியின் மீது சுமற்றப்படும் அடுத்த குற்றச்சாட்டு அவர் பெரும் தொழில் நிறுவனங்களின் கைப்பாவையாக இருக்கிறார். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்காக ஏழைகளின், சிறு விவசாயிகளின் நிலங்களை எல்லாம் அடித்துப் பிடுங்கி தொழில் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கிறார் என்பது.

ஆனால் நிலம் கையக்கப்படுத்த அதே குஜராத் மாநில அரசின் பாணியை தாங்களும் பின்பற்றலாமோ என்று பஞ்சாப் அரசும், மகாராஷ்டிரா அரசும் ஆலோசனை செய்கின்றன என்று இந்தச் செய்தித்தாள் கூறுகிறது.

நிலம் கையக்கப்படுத்துவதை குஜராத் அரசாங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

முந்தய காங்கிரஸ் அரசின் ஊரக வளர்ச்சித் துறை குஜராத் அரசுக்குக் கொடுத்த பாராட்டுப் பத்திரம் இங்கே

திட்டக்குழுவால் நியமிக்கப் பட்ட  டெலாயிட் நிறுவனம் Business Regulatory Environment for Manufacturing - A State Level Assessment என்ற ஆய்வை மேற்கொண்டது.  ஏறத்தாழ ஐந்து மாதங்கள் நடந்த இந்த ஆய்வும் குஜராத் மாநிலத்தின் நிலம் கையக்கப்படுதும் முறையைப் பாராட்டவே செய்கிறது. பாஜக ஆட்சி செய்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச அரசுகளும் இந்த ஆய்வில் முன்னிலையில் இருக்கின்றன என்பது ஒரு கூடுதல் தகவல்.

இது போலவே வர்த்தகத் துறை அமைச்சகமும் தொழில்துறை அமைச்சகமும் இணைந்து நடத்திய ஆய்வில் நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் தங்கள் தொழிலுக்காக நிலம் வாங்கும் போது மிகக் குறைவான அரசு தலையீடே இருக்கிறது என்று பாராட்டுப் பத்திரம் வழங்கி இருக்கிறது.

 ஆக, எல்லா மாநிலங்கள் போலவே குஜராத்தில் மின்சாரப் பற்றாக்குறையும், குடிநீர் பஞ்சமும் இருந்து இருக்கிறது. தெளிவான சிந்தனையும், நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீது அக்கறையும் கொண்ட ஒரு தனி மனிதர் ஏறத்தாழ பதினைந்து ஆண்டு காலத்தில் அதை எப்படி மாற்றி அமைத்தார் என்பது நமது கண் முன்னே இருக்கும் வரலாறு.

நான் வளர்ந்த இயக்கத்தில் தனிமனிதத் துதிகள் நடப்பதில்லை, தனிமனிதர்கள் தவறே இழைக்கமாட்டார்கள் என்று சொல்லப்படுவதும் இல்லை. ஆனால் நாட்டுக்காக உழைப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தவும், ஒருவேளை அவர்கள் தவறு செய்தால் அதனைத் தட்டிக் கேட்கவும், அந்தத் தவற்றை சரிசெய்வதும் நம் எல்லோருடைய கடமையும் என்றே போதிக்கப்பட்டு இருக்கிறது.

குறுகிய கண்ணோட்டங்களையும் காழ்ப்புணர்ச்சியையும் விட்டு விட்டு நாட்டுக்கு உழைக்க வாருங்கள். ஏன் என்றால் தனி மனிதர்கள் வருவார்கள், போவார்கள். நமக்கு பல நூற்றாண்டுகள் முன்னாலும் இந்த நாடு இருந்தது, இன்னும் பல நூறாண்டுகள் பின்னாலும் இருக்கும்.

நல்லது செய்வது ஆற்றீராயின் அல்லது செய்வது ஓம்புமின், இது தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்த பாடம். அதைப் பின்பற்றலாமே

திங்கள், 29 பிப்ரவரி, 2016

மதிப்பிற்குரிய காம்ரேட் மருதன் அவர்களே

விகடன் வார இதழில் உங்கள் கட்டுரையைப் படிக்கும் பேறு பெற்றேன். வழக்கம் போலவே, வாயில் நுழையாத பெயர்களைச் சுட்டி, எட்டடுக்கு மாளிகையின் உச்சியில் அமர்ந்துகொண்டு, மற்றவர்களை எள்ளி நகையாடி, அவர்கள் அறிவிலிகள் என்று முடித்து இருக்கிறீர்கள்.

அதிலும் ஜவஹர்லால் நேருவை வெறுக்கவும், அவர் பெயரால் நடைபெறும் பல்கலைக்கழகத்தை மூடவும் துடிப்பவர்களைப் புரிந்து கொள்ளமுடியும் என்று கூறி இருக்கிறீர்கள். கம்யூனிஸ்ட் மக்களுக்கு எப்போது இருந்து இந்த மனமாற்றம் வந்தது ? உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கிறதே, ஒரு வேளை மோடி பதவி ஏற்றதால் நீங்கள் சகிப்புத்தன்மையோடு இருக்கலாம் என்று மாறிவிட்டீர்களா என்ன ?

முன்றரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த ஜான் காட்டன் பாதிரியாரைப் பற்றிப் பார்பதற்கு முன்னால், ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் தோழர் ஸ்டாலின் ஆட்சியில் சைபீரியச் சிறையில் எத்தனை பேர் கம்யுனிச வழியில் பொன்னுலகை அடைந்தனர் என்று பார்க்கலாமே ?

சரி அது வேண்டாம், சென்சீனத்தில் தினாமென் சதுக்கத்தில் உரிமைக்காகப் போராடிய மாணவர்களை எப்படி உங்கள் பொன்னுலக அரசு நடத்தியது என்பது மறந்து போய் இருந்தால், உங்கள் பார்வைக்காக இந்தப் படம்



சரி, இதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது, இப்போதாவது மாறிவிட்டீர்களா என்று பார்த்தால், இன்று பத்திரிகைகள் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்று தலைவர் சொல்லுவது இங்கே இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டோடு நடைபெறும் செய்து நிறுவனங்களின் கட்டுப்பாடு எது என்று பார்க்க வேண்டுமா ? இங்கே பாருங்கள்.

தேசம் என்பது வெறும் கற்பிதம், தேசபக்தி தேவை இல்லை என்று கூறுவதற்கு முன்னால், உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சீனா வழிகாட்டும் நிலை இங்கே இருக்கிறது

சரி இது எல்லாம் வெளிநாட்டு நிகழ்சிகள், மண் சார்ந்த மார்சியமே எங்கள் கருத்து என்று கூடச் சிலர் சொல்லலாம். ஐநாவிற்கான இந்திய தூதுவரை ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள வந்த போது உங்கள் மாணவ அணியினர் தந்த அன்பான வரவேற்பு என்ன என்று தெரிந்து கொள்ள இங்கே பாருங்கள்.

கலாசாரப் புரட்சி என்றும், ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்றும் மாற்றுக் கருத்து கூறுபவர்களை அழிப்பதையே கொள்கையாகக் கொண்ட சித்தாந்தம் என்பதை இங்கே நிருபிக்கிறார்கள் பாருங்கள்.

கோல்வார்கர், சவர்கார் பற்றி மட்டும் அல்ல, தெனிந்தியாவில் உள்ள பலருக்கு சந்திரசேகர ஆசாத், கோவிந்த வல்லபபந்த், ஆச்சாரிய கிருபளானி, விபின் சந்திரபால், தேசபந்து ஆண்டருஸ், ஏன் காந்தியின் குரு கோபால கிருஷ்ண கோகுலே பற்றிக்கூடத் தெரியாது. கக்கனைப் பற்றி, ஜீவாவைப் பற்றி, பி ராமமூர்த்தி பற்றி எத்தனை வட இந்தியர்களுக்குத் தெரியும் ? நெருக்கடி நிலையைப் பற்றி, அதை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணனைப் பற்றி எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும் ? மக்களிடம் மறைக்கப்பட்டதால் இவர்கள் தியாகங்கள் இல்லை என்றா ஆகிவிட்டது ?  ஏன் இவர்களைப் பற்றிய குறிப்புகள்கூட பாடப்புத்தகங்களில் இல்லை என்று இந்த அறிவாளிகள் என்றாவது கேள்வி எழுப்பியது உண்டா ?

கோசாம்பியைத் தெரிந்தவர்களைக் காட்டிலும், ராகுல்ல சங்க்ரஹ்ரித்யாயனைத் தெரிந்தவர்களைக் காட்டிலும் பண்டிட் தீனதயாள் உபாத்தியாவைத் தெரிந்தவர்கள் அதிகம் தான் தோழரே. ஹிந்துவர்களில் அறிஞர்கள் இல்லையா ? ராம் ஸ்வரூப், சீதாராம் கோயல் இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? தரம்பாலின் சிந்தனைகளை இன்றுவரை உங்களால் மறுக்க முடியவில்லை என்பதுதானே உங்களுக்குக் கசப்பான உண்மை.

நீங்கள் நீட்டி முழங்கும் பல்கலைக்கழத்தின் நிலை என்ன என்று உண்மையில் உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் இடமாகவல்லவா, இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக் கழகம் இருக்கிறது, உங்கள் பார்வைக்கு இரண்டு செய்தி இணைப்புகள்.

இதுநாள் வரை மேடையில் முழங்கவும், பத்திரிகையில் எழுதவும் உங்களைப் போன்ற சில அறிவாளிகளுக்கு மட்டுமே இடம் இருந்தது, என்ன உங்கள் போதாத நேரம் என்னைப் போன்ற மூடர்கள் சிலரும் இப்போது பொதுவெளியில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள், அது  பத்திரிக்கைகாரர்கள் என்று கூறிக் கொள்ளும் பலருக்குப் பொறுக்க முடிவவில்லை. அவர்கள் இப்போது அரசாங்கத்தில் யார் அமைச்சராக வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதை முடிவு செய்துகொண்டு இருந்தார்கள், இப்போது அது முடியவில்லை. அதனால் கம்பன் சொல்வது போல " திகைத்தனர் போலும் செய்கை" என்று ஆகிவிட்டார்கள் போல.

ஊடகங்களின் நேர்மையைப் பற்றி, சன் தொலைகாட்சி நிறுவனரின் வாக்குமூலம் இங்கே இருக்கிறது. இவர்களையா நீங்கள் மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பப் போகிறார்கள் என்று சொல்கிறீர்கள் ?

எந்த வயதுவரை ஒரு மாணவன் கல்லூரியில் / பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் என்று கருதப்படலாம் ? 2002இல் பள்ளிப்படிப்பை முடித்த ஒருவர் 2005இல் பட்டப்படிப்பை முடித்து, 2007இல் முதுகலைப் படிப்பையும் முடித்து இருப்பார், அப்படி என்றால் எட்டு வருடங்களாக ஆராய்ச்சி மாணவராகவா இருக்கிறார் ? அதுவும் ஆப்ரிக்கா பற்றிய ஆராய்ச்சியில் ? இந்த நாட்டு மக்களின் வரிப்பணம் இந்த மாணவர்களின் கல்விக்கு மட்டுமே தவிர, அவர்களின் அரசியலுக்கு அல்ல, அப்படி அரசியல் செய்ய வேண்டும் என்றால் அதை அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சி கொடுக்கட்டும், பொதுமக்களின் பணத்திற்கு வேறு நல்ல பணிகள் இருக்கின்றன.

அது சரி ரோஹித் வெமுலாவின் சந்தேகத்திற்கு இடமான தற்கொலையை நீங்கள் சொல்லும் அறிவாளிகள் எப்படி வர்ணமடிதார்கள் ? மாணவன் தற்கொலை என்றா இல்லை ஒரு தலித் மாணவன் தற்கொலை என்றா ? அப்போது அவர் தலித்தா இல்லையா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதானே ?  நான் என்ன ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை என் எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள், நான் சொல்லவில்லை இதை, செஞ்சட்டைப் போராளி ஒருவர் சொன்னது இது.



இவை மாணவர் அமைப்பு வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள். நீங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா ? இதைப் பேச்சுரிமை என்றா சொல்லுவீர்கள் ? வரைமுறை அற்ற உரிமை என்பது எங்குமே கிடையாது, எல்லா உரிமையும் கடமைகளோடு இணைந்தே உள்ளது. எங்கும் நடக்கும் உரிமை உள்ளது என்று புகைவண்டிப் பாதையில் நடந்தால் என்ன ஆகும் ?

நீங்கள் ஏன் கார்ல் மார்க்ஸ் போல புத்தகம் எழுதவில்லை என்ற கேள்வி காந்தியிடம் கேட்கப்பட்ட போது, அவரைப் போன்று எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கவில்லை என்று காந்தி சொன்னார். அரசாங்கப் பணத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் நாங்கள் கருத்தரங்குகள் நடத்திக்கொண்டு இருக்கவில்லை. இந்தியா எங்கும் ஓராசிரியர் பள்ளிகளும், ஏகல் வித்யாலைகளும், வித்யா பாரதி நடத்தும் பள்ளிகளும் என்று பரவி இருப்பதை நீங்கள் அறிவீர்களா ? ஒரே ஒரு நானாஜி தேஷ்முக் செய்த பணியை நீங்கள் கூறும் எந்த அறிஞர்களும் செய்யவில்லை. மந்தாகினி நதிக்கரையில், சித்திரகூடத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி கிராமியப் பல்கலைக்கழகம் அவர் உருவாக்கியது. நாங்கள் நிறுவனங்களை உருவாக்குபவர்கள், இடதுசாரி அறிவிஜீவிகள் போல மற்றவர் பணத்தில் நீச்சல் அடிப்பவர்கள் அல்ல.

ஏறக்குறைய பதினாறு வருடத்தில் இந்த நாட்டுக்குள் ஏழைகளுக்கு சேவை செய்ய என்ற போர்வையில் வந்த பணம் ஏறத்தாழ தொண்ணுற்று ஐந்தாயிரம் கோடி ரூபாய்கள்.  எதுவுமே செய்யாமல் எல்லா இந்தியர்களுக்கும் இந்தப் பணத்தைப் பிரித்துக் கொடுத்து இருந்தாலே, தலைக்கு அறுநூறு கோடி ரூபாய்கள் வந்து இருக்குமே ? எங்கே போனது இவ்வளவு பணமும், அது என்ன ஆனது என்று கேட்டால், கேட்பவர்கள் அறிவிலிகளா ?

இந்த நாடு உடையவேண்டும் என்று நீங்கள் கூட்டம் போட்டு, கோசம் எழுப்பிக்கொண்டு இருக்கும்போது, 1947இல் காஷ்மீரத்தில் உயிரைப் பணயம் வைத்து ராணுவத்திற்கு உதவியது யார் ? 1962இல் கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தபோது, ராணுவத்திற்கு உதவியது யார் ? எதற்க்காக நேரு ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களைக் குடியரசு அணிவகுப்பில் கலந்து கொள்ளக் கேட்டுக்கொண்டார் ?

எங்கே உங்கள் ஜேஎன் யு என்று கேட்கிறீர்களே, இந்த நாட்டில் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கல்விக்கூடம் நடத்தக் கூடாது என்று சட்டம் மட்டும்தான் இல்லை, அதற்கான தடைகள் என்னவெல்லாம் என்று தெரியுமா ? சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்விக்கூடத்தில் அரசின் பல சட்டங்களே செல்லாது என்பதையும் நீங்கள் சுட்டிக் காட்டி இருக்கவேண்டும். ஏன் சமூகநீதி என்று குரல் குடுப்பவர்கள், சிறுபான்மைக் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடே கிடையாது என்பதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் கேட்டுச் சொல்லுங்கள்.

எல்லாவற்றிலும் சமத்துவம் பேசும் நீங்கள், கல்விக்கூடங்கள் நடத்துவதிலும் சமத்துவ நிலைமைக்காகப் போராடுங்கள், பின்னர் கேள்விகளைக் கேளுங்கள்.

நேர்மையாளர்கள் அதைதான் செய்வார்கள்.

இன்னொன்று கம்யுனிச தத்துவம் என்பது உலகம் முழுவதும் தோல்வி அடைந்த ஓன்று என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அன்புடன்
இராமச்சந்திரன்  

சனி, 20 பிப்ரவரி, 2016

நண்பரிடம் சில கேள்விகள்

எனது கெழுதகை நண்பரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடமாநிலத் தளகர்த்தர்களில் ஒருவரும், தனியார் பொறியியல் கல்லூரித் தலைவருமான ஒருவர் தனது நிலைத் தகவலில் இவ்வாறு பகிர்ந்து இருந்தார்.


// தேசபக்தி
1. நம் தேசத்தின் இறையாண்மையை மனதார ஏற்றுக்கொள்வது.
2. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக நாடாளுமன்ற, சட்டமன்றங்களின், நீதிமன்றங்களின் மாண்பை மனதார ஒப்புக் கொள்வது.
3. நம் அளவில் சட்டத்தை மதிக்கும் முழுமையான குடிமகனாக வாழ்ந்து மடிவது.
இதுதான் தேசபக்திக்கு நான் கொண்டிருக்கும் வரையறை.
இத்தனை ஆண்டுகளாக இதில் யாரும் சந்தேகம் எழுப்பியதில்லை. எனக்கு நானே எனது இந்த நம்பிக்கைக் குறித்து ஒருபோதும் ஐயம் கொண்டதில்லை.
இப்போது, முதன்முறையாக தேசபக்திக்கு எங்கிருந்தோ, யார் யாரெல்லாமோ விளக்கமும், அறிவுரையும் நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் தேசபக்தி மீது கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சந்தேகம் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஜனாதிபதி அப்துல்கலாம் ஆனாலும், சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் ஆனாலும் இந்திய முஸ்லீம்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் தத்தம் தேசபக்தியை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஒரு கட்டாயம் இங்கே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு தலைமுறையாக இந்த நாட்டில் பிறந்து வாழும் பல கோடி இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் தேசபக்தி மீதான இந்த ஐயப்பாடுகளைக் கண்டு உள்ளம் குமுறிக் கொண்டு இருப்பதை, நான் மிகவும் வேதனையுடன் பார்த்து வருகிறேன்.
ஒரு அரசியல் அமைப்பின் மீது யாருக்கும், எந்தக் கருத்தும் இருக்கலாம்! ஆனால், அதன் தேசபக்தியின் மீது கேள்வி எழுப்புவது என்பது, அந்தக் கட்சியை அங்கீகரித்து இந்த ஜனநாயகத்தில் இடமளிக்கும் நம் அரசியல் அமைப்பின் மீது கேள்வி எழுப்புவது ஆகும். இதை, நாம் எந்த விதத்திலும் சகித்துக் கொள்ளவே கூடாது.
எது தேசபக்தி? என்று நமக்கு உபதேசிக்கும் அருகதையற்றது இப்போதைய அதிகார வர்க்கம் என்பது நாம் அறிவோம்.
எனது இந்தப் பதிவின் மீது விமர்சனமும், எதிர்கேள்விகளும் வைக்கப் போகும் நண்பர்களிடம் ஒரே ஒரு கேள்வி!
தேசவிரோதச் செயல் என sedition குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் அந்த மாணவன், நிரபராதி என நீதிமன்றத்தில் விடுதலை ஆனால், இந்த அதிகாரவர்க்கத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியான பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்வாரா?
இந்த நாட்டின் இறையாண்மை மீதும், நீதிமன்றங்களின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர்களான உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?
வன்முறை தவிர்த்து, நம் நாட்டின் இறையாண்மையின் மீது ஒரு துளி நம்பிக்கை இருந்தாலும் எனது இந்தக் கேள்வியின் நியாயத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.
நான் எப்போதுமே சொல்வதுதான்!
சரித்திரம் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
அது ஈவிரக்கமற்றது.//

நண்பருக்கு என் கேள்விகள் 

 // 1. நம் தேசத்தின் இறையாண்மையை மனதார ஏற்றுக்கொள்வது. 
2. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக நாடாளுமன்ற, சட்டமன்றங்களின், நீதிமன்றங்களின் மாண்பை மனதார ஒப்புக் கொள்வது.
3. நம் அளவில் சட்டத்தை மதிக்கும் முழுமையான குடிமகனாக வாழ்ந்து மடிவது.
இதுதான் தேசபக்திக்கு நான் கொண்டிருக்கும் வரையறை.//

இது தேசபக்தி பற்றிய உங்கள் வரையறை, நல்லது இதன்படி இந்த நாடு துண்டாடப்பட வேண்டும் என்று கோஷம் எழுப்புவது மற்றும் அரசியலமைப்புச்சட்டத்தின் பாதுகாவலர்கள் கூடி இருந்த நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவது, அந்தக் குற்றத்தை நிருபித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை அளித்த நீதிமன்றத்தை அவதூறு செய்வது இதில் அடங்காது அல்லவா, இல்லை கருத்துரிமை என்ற பெயரால் இதனை அனுமதிப்பது பற்றிய தங்கள் நிலைப்பாடு என்ன ? 

// இத்தனை ஆண்டுகளாக இதில் யாரும் சந்தேகம் எழுப்பியதில்லை. எனக்கு நானே எனது இந்த நம்பிக்கைக் குறித்து ஒருபோதும் ஐயம் கொண்டதில்லை.//
நல்லது, இதுவரை உங்கள் தேசபக்தியை யாரும் கேள்வி கேட்கவில்லை, இனியும் கேட்காத அளவில் நம் ( எல்லோரின் ) நடத்தையும் இருக்கட்டும். 

//இப்போது, முதன்முறையாக தேசபக்திக்கு எங்கிருந்தோ, யார் யாரெல்லாமோ விளக்கமும், அறிவுரையும் நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.//

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்போம், இதுதான் நமது வழிமுறை நண்பரே. 

// இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் தேசபக்தி மீது கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சந்தேகம் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஜனாதிபதி அப்துல்கலாம் ஆனாலும், சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் ஆனாலும் இந்திய முஸ்லீம்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் தத்தம் தேசபக்தியை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஒரு கட்டாயம் இங்கே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு தலைமுறையாக இந்த நாட்டில் பிறந்து வாழும் பல கோடி இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் தேசபக்தி மீதான இந்த ஐயப்பாடுகளைக் கண்டு உள்ளம் குமுறிக் கொண்டு இருப்பதை, நான் மிகவும் வேதனையுடன் பார்த்து வருகிறேன்//

மிகத் தவறான புரிதல், எந்த சாதாரண இஸ்லாமியர் மீதும் இப்படிக் குற்றச்சாட்டு சூட்டப்படவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மதத்தின் பின்னும், ஜாதியின் பின்னும் ஒளிந்துகொண்டு தாங்கள் அதனாலே பழிவாங்கப் பட்டதாகச் சொல்கிறார்கள். நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால் இன்று இந்த தேசத்தில் எந்த  இஸ்லாமியரும்  முதல் குடிமகன் என்ற அளவு வரை உயர்ந்து இருக்க முடியாது. இந்த நாட்டின் எத்தனை முதலமைச்சர்கள், எத்தனை ஆளுநர்கள், எத்தனை ராணுவத் தளபதிகள், எத்தனை உயர்நீதிமன்ற / உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ற பொறுப்புகளை வகித்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அல்ல, அவர்களின் தகுதியால், திறமையால் இந்தப் பதவிகளை அலங்கரித்து உள்ளனர். இன்னும் இதுபோன்ற பதவிகளுக்கு பலப்பல இஸ்லாமிய சகோதரர்கள் வருவார்கள், தங்கள் பங்களிப்பை இந்த நாட்டுக்குத் தருவார்கள்.

உதாரணமாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவராக திரு அசாருதீன் தேர்ந்தெடுக்கப்பட்டது அவர் திறமையால். ஆனால் கிரிக்கெட் சூதாட்டக் குற்றச்சாட்டு அவர் மீது நிருபிக்கப்பட்டபோது தான் இஸ்லாமியர் என்பதால் பழிவாங்கப்பட்டேன் என்ற அவரது பேச்சை இந்த நாட்டின் இஸ்லாமியர்கள் யாரும் ஏற்கவில்லை. ஆனால் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கி அழகு பார்த்தது உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் என்பது வரலாறு.

ஆக இல்லாததையும் பொல்லாததையும் கூறி இந்த மண்ணின் மக்களைப் பிரித்துவிடாதீர்கள் நண்பரே. 

// இப்போது, அந்தக் கொடிய கரங்கள் கம்யூனிஸ்டுகள் மீதும் நீண்டிருக்கிறது.
கம்யூனிஸ்டுகளின் தேசபக்தி மீது இந்தோ-சீனப் போரின் போது கேள்வி எழுப்பியவர்கள் கூட பின்னாளில் ஒவ்வொருவராக அதற்கு வருத்தம் தெரிவித்தது வரலாறு.//
கேள்வி எழுப்புவதே தவறு அல்ல நண்பரே, சீனப் போரின் போது நடந்தவைகளைச் சற்றே படித்துப் பாருங்கள். 

// எது தேசபக்தி? என்று நமக்கு உபதேசிக்கும் அருகதையற்றது இப்போதைய அதிகார வர்க்கம் என்பது நாம் அறிவோம்.//

இது உங்கள் கருத்து, இதை வெளிப்படையாகச் சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு. 

//எனது இந்தப் பதிவின் மீது விமர்சனமும், எதிர்கேள்விகளும் வைக்கப் போகும் நண்பர்களிடம் ஒரே ஒரு கேள்வி!
தேசவிரோதச் செயல் என sedition குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் அந்த மாணவன், நிரபராதி என நீதிமன்றத்தில் விடுதலை ஆனால், இந்த அதிகாரவர்க்கத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியான பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்வாரா?
இந்த நாட்டின் இறையாண்மை மீதும், நீதிமன்றங்களின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர்களான உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?
வன்முறை தவிர்த்து, நம் நாட்டின் இறையாண்மையின் மீது ஒரு துளி நம்பிக்கை இருந்தாலும் எனது இந்தக் கேள்வியின் நியாயத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.//

 நமது நாட்டின் குற்றவியல் சட்டங்கள் நூறு நிரபராதி தப்பிக்கப்படலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற முறையில்  நடைபெறுபவை. சட்டத்திற்கு தேவை சாட்சிகள், முழுமையான ஆதாரங்கள். " சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு அளித்து, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்"  என்ற வாக்கியத்தை நீங்கள் அடிக்கடி கேட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 

சட்டத்தின்படி சரி என்பதற்கும் - தர்மத்தின்படி / அறநெறிகளின் படி சரி என்பதற்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  

ஒரு அரசு தான் தொடுத்த வழக்கில் வெற்றியடையவில்லை என்றால் அந்த அரசின் பிரதமர் அதற்குப் பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள். சரி, ஆனால் உங்கள் கட்சி அரசு தான் தொடுத்த எல்லா வழக்கிலும் வெற்றி அடைந்துவிட்டதா ? அப்படி இல்லாத நிலையில் உங்கள் கட்சியின் சார்பாக முதல்வராக இருந்தவர் எந்த நிலைப்பாட்டை எடுத்தார் என்பதைத் தெளிவு படுத்த முடியுமா ? 

நீங்கள் எடுத்த நிலைப்பாட்டையே இன்றைய பிரதமர் எடுக்கலாம் அல்லவா ? கோபாலபுரம் கைகாட்டித்தானே டெல்லி செயல்படுகிறது என்று நீங்கள் பெருமையோடு பேசலாம் அல்லவா ? 

இறுதியாக எனக்கு ஒரே ஒரு ஐயம் - நீங்கள் தலைவராக இருந்து நடத்தும் கல்லூரியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த உங்கள் மாணவர்கள் முடிவு செய்தால், அதில் பாராளுமன்றத் தாக்குதலை சரி என்று கூறி, இந்தியா துண்டாடப்படவேண்டும் என்ற முழக்கங்களை எழுப்ப விரும்பினால்  உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும் ? 
கருத்து சுதந்திரம் என்ற நிலையில் அனுமதிப்பீர்களா அல்லது உங்கள் தேசபக்தி என்ற நிலையில் மறுப்பீர்களா ? உங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறலாமா ? 

அன்புடன் 
இராமச்சந்திரன்